பல்லாவரம் ஏரிக்கு புத்துயிர் அளிக்கும் முயற்சியில் ராணுவத்தினர் ஈடுபட்டனர். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தென்மண்டல ராணுவத்தினர் எக்ஸ்னோரா தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 3 நாட்கள் ஏரியை சுத்தப்படுத்தினர். இயற்கையைப் பாதுகாப்பதில் பங்களிப்பை ஆற்றுவதையும் நிலையான சுற்றுச்சூழல் நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இதில் கலந்துகொண்டவர்களுக்கு தென்மண்டல ராணுவ தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கே.எஸ்.பிரார் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.