districts

img

சமையல் எரிவாயு தொகையை முழுமையாக வழங்க வேண்டும் சென்னையில் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

சென்னை, மார்ச் 15 - சமையல் எரிவாயு (சிலிண்டர்) தொகையை முழுமையாக வழங்க கோரி செவ்வாயன்று (மார்ச் 15) சென்னை தரமணியில் உள்ள இயக்குநர் அலுவல கம் முன்பு அங்கன்வாடி ஊழி யர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சமையல் எரிவாயு விலை 1000 ரூபாயை தாண்டி யுள்ளது. ஆனால் அலுவ லகத்திலிருந்து 404 ரூபாய் மட்டுமே வழங்கப்படு கிறது. எஞ்சிய தொகையை  ஊழியர்களின் ஊதியத்தி லிருந்து செலுத்த வேண்டி உள்ளது. எனவே,  பில்லில் உள்ள முழுத் தொகையையும் வழங்க வேண்டும். மேலும், காய்கறி, மளிகை பொருட்கள், எரிவாயு வாங்க மையத்திற்கு 10 ஆயிரம்  ரூபாய் முன்பணம் வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்க ளுக்கு வழங்கப்பட்டுள்ள செல்போன்கள் பயன் பாட்டிற்கு உதவாத நிலை யில் உள்ளது. பழுதடைந்த போன்களை சொந்த செலவில் பழுதுபார்க்க சொல்வதை கைவிட்டு, புதிய செல்போன்களை வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும், ஊழியர்களுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்க ளுக்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டும், 10 ஆண்டு பணி முடித்த, 10ஆம்  வகுப்பு தேர்ச்சி பெற்ற உத வியாளர்களை ஊழியர்க ளாக பதவி உயர்வு வழங்க வேண்டும், 3 ஆண்டு பணி  முடித்த மினி மைய ஊழியர் களை, பொது மையங்களில் பணியாற்ற பதவி உயர்வு தர வேண்டும், 5 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள ‘இன்சார்ஜ்’ தொகையை வழங்க வேண்டும், பணி புரியும் ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஊக்கத் தொகை தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி வட சென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாநிலச் செயலாளர் சித்திரைச்செல்வி தலைமை தாங்கினார். மாநிலப் பொதுச் செயலாளர் டி. டெய்சி, மாநிலச் செயலா ளர் ஹேமப்பரியா, துணைத் தலைவர் கஜலட்சுமி, சிஐடியு  தென்சென்னை மாவட்டச்  செயலாளர் பா.பாலகிரு ஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர்.