districts

குற்றம் சாட்டப்பட்ட கல்லூரி நிர்வாகமே விசாரணை குழுவை அமைத்த வினோதம்

சென்னை, ஏப்.4- மாணவிகளின் பாலியல் புகார் தொடர்பாக விசாரணை நடத்த 3 பேர் அடங்கிய குழுவை அமைத்துள்ளதாக கலா ஷேத்ரா அறக்கட்டளை அறிவித்துள்ளது. ஒன்றிய அரசின் கலாச்சாரத் துறையின் கீழ் சென்னை திருவான்மியூரில் கலா ஷேத்ரா நாட்டியக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவிகளுக்கு, பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாகப் புகார்கள் எழுந்தன. இதற்கிடையில், புகாருக்கு உள்ளான பேரா சிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட் டுள்ளார். உதவியாளர்கள் சாய்கிருஷ்ணன்,  சஞ்ஜித் லால், ஸ்ரீநாத் ஆகியோர் மீது  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவி கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடு பட்டனர்.  இந்நிலையில், மாணவிகளின் பாலியல் புகார் தொடர்பாக விசாரணை நடத்த 3 பேர்  அடங்கிய குழுவை கலாஷேத்ரா அறக்கட்டளை அமைத்துள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன், ஓய்வு பெற்ற டிஜிபி லத்திகா சரண், மருத்துவர் ஷோபா  வர்தமான் ஆகியோர் அதில் இடம்பெற்றுள் ளனர்.
கி.வீரமணி சாடல்
“சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசுக்கு உரியது; தமிழ்நாடு முதலமைச்சரின் அறி விப்புப்படி, திட்டவட்டமாக காவல்துறை குற்றவாளிகளைக் கண்டறிந்து, உரிய நடவடிக்கைகளை முடுக்கிவிடும் நேரத்தில், அதனை நீர்த்துப் போகவோ அல்லது தண்டனைகளிலிருந்து குற்ற மிழைத்தோரை காப்பாற்றிடவோ இப்படிப்பட்ட நடவடிக்கை என்பதாகவும் பலத்த கேள்வியும், சந்தேகமும் எழுகின்றன.  பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நீதி கிடைக்கவேண்டும்; படிக்கும் மாண விகளின் எதிர்காலம்பற்றிய வாழ்வுரிமை பாதுகாப்புப் பிரச்சினை இதில் அடங்கி யுள்ளது. மறைமுகமாக ‘ஒரு போட்டி அரசினை நடத்திடுவது’ போன்ற நடவடிக் கையாக, தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினையை திசை திருப்பி - அந்தப் புகாரினை ஒன்றுமில்லாததாக்கி, ‘‘வெள்ளையடிக்க மறைமுக ஏற்பாடா?’’ இக்கமிட்டி திடீரென்று முளைத்தது முக்கிய கேள்வியாக இருந்து வருகிறது. ஒன்றிய அரசின் பிரச்சினைகள் தமிழ்நாட்டில் சில ஒன்றிய பல்கலைக் கழகங்களில் ஏற்பட்டபோது, காட்டப்படாத அவசரம் இப்போது இதற்கு மட்டும் ஏன்  என்பதே, பொதுவெளியில் எழும் சந்தே கங்களும், கேள்விகளும் ஆகும். எனவே, இந்தத் திடீர் ‘மூவர்’ குழு நியமனம் என்பது  பிரச்சினையைத் திசை திருப்பி, குற்ற வாளிகளைத் தப்பிக்கவிட ஓர் உபாயமோ என்பதே பரவலாக எழுந்துள்ள  சந்தேகமாகும். எனவே, தமிழ்நாடு அரசு இதில் தனி கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.