districts

சென்னை முக்கிய செய்திகள்

அறுவை சிகிச்சைக்கு பயந்து  வாலிபர் தற்கொலை

செங்கல்பட்டு,மே 6- செங்கல்பட்டு மாவட்டம், பாலூர் அடுத்த கரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது 32). இவருக்குத் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அவருக்கு  கடந்த சில நாட்க ளுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கிட்னி செயல் இழந்து விட்ட தாகக் கூறியுள்ளனர். இதற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.  இதனால் மன முடைந்த அருண்குமார் மருத்துவ மனையில் இருந்து வீட்டுக்கு வந்து  கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

பறக்கும் ரயில் கட்டணம் உயர்கிறது


சென்னை,மே 6-  சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவை இயங்கி வருகிறது.  இந்த வழித்தடத்தில் தினமும் 150 பறக்கும் ரயில்கள் இயக்கப்படு கின்றன. தற்போது வேளச்சேரியை யும், பரங்கி மலையையும் இணைக்கும் பறக்கும் ரயில் திட்டம் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே 19 ரயில் நிலையங்கள் உள்ளன. பறக்கும் ரயிலில் பயணம் செய்ய குறைந்த அளவிலேயே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பறக்கும் ரயிலில் பயணிக்க குறைந்தபட்ச கட்டணம் ரூ5 மட்டுமே ஆகும்.  இந்த நிலையில் பறக்கும் ரயில் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருவதாக ரயில்வே கூறுகிறது. கடந்த ஆண்டு மட்டும் ரூ.84.10 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தெற்கு ரயில்வே பறக்கும் ரயில் சேவைக்கு ஆண்டுதோறும் ரூ.100 கோடிக்கு மேல் செலவிடுகிறது. இந்த பணம் ரயில் இயக்கம், பராமரிப்பு மற்றும் ஊழியர்களின் சம்பளம் ஆகியவற்றுக்காக செல விடப்படுகிறது. பறக்கும் ரயில் டிக்கெட் விற்பனை மூலம் தெற்கு ரயில்வேக்கு கடந்த ஆண்டு ரூ.17.25 கோடி மட்டுமே வருமானம் கிடைத்துள்ளது. இந்த நிலையில் பறக்கும் ரயில் சேவையை தெற்கு ரயில்வேயிடம் இருந்து கையகப்படுத்த தமிழ்நாடு அரசு ஆலோசித்து வருகிறது. எனவே விரைவில் பறக்கும் ரயில் சேவைகள் அனைத்தும் தமிழ்நாடு அரசுக்கு மாறலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. தற்போது இழப்பு ஏற்பட்டு வருவதால் ரயில் நிலையங்களை பராமரிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே பறக்கும் ரயில் கட்டணம் உயருகிறது. குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாயில் இருந்து 10 ரூபாயாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட உள்ளது. பறக்கும் ரயில் பயணிகளுக்கு சிறந்த வசதிகளை வழங்க வேண்டும் என்று மாநில அரசு விரும்புகிறது. பறக்கும் ரயிலை தமிழ்நாடு அரசு ஒரே நேரத்தில் கையகப்படுத்தினால்  150  ரயில் பெட்டிகளை வாங்கும். அதன் விலை மட்டும் சுமார் ரூ.140 கோடி ஆகும் அனைத்து பறக்கும் ரயில் நிலையங்களையும் வணிக ரீதி யாக சென்னை பெரு நகர மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் மேம்படுத்துவது என்றும் செயல்பாடு மற்றும் பராமரிப்பை தெற்கு ரயில்வே மேற்கொள்வது என்பதும்   முதல்கட்ட  திட்டமாகும். அடுத்த கட்டத்தில் பறக்கும் ரயில் சேவை முழுவதையும் கையகப்படுத்திக்கொள்வது என மாநில அரசு திட்டமிட்டுள்ளது. பறக்கும் ரயில் முதலில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைக்கப்பட இருந்தது. ஆனால் அது நிறைவேறவில்லை. சென்னை கடற்கரை மற்றும் பூங்கா ரயில் நிலையங்களுக்கிடையே புதிய வழித் தடத்தை அமைக்க நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக சிக்கல் எழுந்தது. இதனால் 2018-ம் ஆண்டு இந்த திட்டத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கைவிட்டது குறிப்பிடத்தக்கது.

நண்பரை அடித்து கொன்று உடலை  ஐஸ் பெட்டியில் வைத்தவர் கைது

சென்னை,மே 6- புது வண்ணாரப்பேட்டை அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் வேலு (வயது 47). இவர் காசிமேட்டில் மீன் பிடி தொழில் செய்து வந்தார். அதே பகுதியில் திரு வல்லிக்கேணி அயோத்தியா நகரை சேர்ந்த பரசுராமன் (47) என்பவரும் மீன்பிடி தொழில் செய்து வந்தார். இரு வரும் நண்பர்கள்.   கடந்த 27-ந்தேதி வேலு, பரசுராமன் உள்பட 7 பேர் ராஜ் என்பவருக்கு சொந்த மான 2 பைபர் படகில் மீன்பிடி தொழி லுக்கு சென்று திரும்பி உள்ளனர். பின்னர் அன்றே கரைக்கு திரும்பிய வேலு, சகாயம் மற்றும் பரசுராமன் ஆகிய 3 பேரும் முத்தையா தெருவில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த  சென்றுள்ளனர். அப்போது சகாயத்திற்கும் வேலுவுக்கும் போதையில் தகராறு ஏற்பட்ட தாக கூறப்படுகிறது. பின்னர் காசிமேடு நாகூ ரான் தோட்டம் பைபர் படகுகள் நிறுத்தும் வார்ப்பு பகுதியில் வேலு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த பரசுராமனிடம் வேலு எதற்காக சகாயத்துக்கு ஆதரவாக பேசினாய் என கேட்டு தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் ஏற்பட்ட வேலு சம்பவ இடத்திலேயே இறந்தார். உடனே வேலுவின் உடலை இரவு முழுவதும் பைபர் படகில் உள்ள ஐஸ் பெட்டியில் வைத்துள்ளார். மறுநாள் காலையில் மீன் வலை பின்னும் கூடத்தில் வேலுவின் உடலை போட்டு விட்டு தப்பி சென்றுவிட்டார். இதைப்பார்த்த காசி மேடு பகுதியைச் சேர்ந்த வீரப்பன் (52) என்பவர் காசிமேடு மீன்பிடி துறை முக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வேலுவின் உடலை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதில் அவர் கொலை செய்யப்பட்ட விவரம் தெரிய வந்தது. அதன் பேரில் போலீசார் விசா ரணை நடத்தி தலைமறைவாக இருந்த பரசுராமனை கைது செய்தனர்.

சென்னையில் 325 பள்ளிகளுக்கு காலை உணவுதிட்டம் விரிவாக்கம்

சென்னை,மே 6- தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும்அரசு பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.   சென்னை மாநகராட்சி மூலம் ஏற்கனவே 28 பள்ளிகளில் படிக்கும் 5,318குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டுவருகிறது. வடசென்னை பகுதி குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இதுசெயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேலும் 325 பள்ளிகளுக்குஇத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதன் மூலம் கூடுதலாக 60 ஆயிரம் மாணவர்களுக்குகாலை உணவு வழங்க அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இதற்காக 29 சமையல் கூடங்கள்அமைக்கப்படும் பணி முழுவீச்சில் நடக்கிறது.  15 மண்டலங்களிலும் காலை சிற்றுண்டி திட்டம் விரிவுப்படுத்தப்படுகிறது. விரிவாக்கப்படும் திட்டத்தின் மூலம் 363 மாநகராட்சி பள்ளிகளில் 65 ஆயிரம் மாணவர்களுக்குஉணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-காலை சிற்றுண்டி திட்டத்தை விரிவுபடுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுஅதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. 15 மண்டலங்களிலும் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு சமையல் கூடங்கள் அமைக்கும் பணி நடக்கிறது.  சமையல் கூடங்களில் இருந்து பள்ளிகளுக்கு விரைவாக உணவை எடுத்துசெல்லக்கூடிய வகையில் நவீன சமையல் கூடம் அமைகிறது. அங்கிருந்து உணவை எடுத்து செல்ல 33 வாகனங்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் குறித்தநேரத்தில் பள்ளிகளுக்கு உணவு வினியோகிக்கப்படும். சமையல் பணியில் ஈடுபடஊழியர்களும் கூடுதலாக நியமிக்கப்பட உள்ளனர்.

ரேஷன் கடை:  'கியூ ஆர் கோடு' மூலம்  பணப்பரிவர்த்தனை

காஞ்சிபுரம்,மே 6- தமிழகத்தில் முதல் முறையாக காஞ்சி புரம் மாவட்டத்தில் உள்ள ரேசன் கடை களில் 'கியூ ஆர் கோடு' மூலம் பணப்பரி வர்த்தனை செய்யும் நடைமுறையை அறிமுகம் செய்யப்பட்டது. இந்தநிலையில் தமிழகத்தில் முதல் முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களிலும் மின்னணு பரிமாற்றம்  ( ‘கியூ ஆர் கோடு’) மூலம் பணமற்ற பரி வர்த்தனை நடைமுறைப்படுத்தும் திட்டத்தை காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட டெம்பிள் சிட்டியில் உள்ள எம்.வி.எம்.பி. நகர் ரேசன் கடையில் சென்னை, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் தொடங்கி வைத்தார்.

மின்சாரம் தாக்கி மாணவன் பலி

கொருக்குப்பேட்டை ஆர்.கே. நகரை சேர்ந்த கார்த்திக் மகன் கவின் (வயது 13). இவர் தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். கவின் தனது பாட்டியுடன் புத்தா தெருவில் உள்ள கருப்பசாமி கோவிலுக்கு சென்று திரும்பி வரும் வழியில் கோவிலில் சீரியல் பல்பு கட்டுவதற்கு கட்டப்பட்டிருந்த கட்டையில் கை வைத்துள்ளார். அதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்தி லேயே கவின் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.