அம்பத்தூர், ஜூலை 16-
வளசரவாக்கத்தில் 6 கிலோ கஞ்சா கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
அண்ணாநகர் மதுவிலக்கு காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் பைக்கில் வந்தவரை மடக்கி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் விருகம்பாக்கம் இளங்கோ நகரைச் சேர்ந்த வெங்கடேசபெருமாள் (28) என்பது தெரிய வந்தது. மேலும் ஆந்திராவிலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து வளசரவாக்கம், போரூர் பகுதியில் விற்பனை செய்வதும் தெரியவந்தது இதையடுத்து காவல் துறையினர் அவரை கைது செய்து அவரிடமிருந்த 6 கிலோ 100 கிராம் கஞ்சா, செல்போன், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.