districts

img

விமான நிலையத்தில் டாக்சி ஓட்டுநர்கள் போராட்டம்

சென்னை,அக்.9 - நீதிமன்ற உத்தரவுப்படி, விமான நிலைய பிரிபெய்டு டாக்சி திட்டத்தில் 16 கார்களை இணைக்க கோரி திங்களன்று (அக்.9) குடும்பத்துடன் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. சென்னை விமான நிலையத்தில் கருப்பு-மஞ்சள் நிறத்திலான வாடகை கார்கள் (டாக்சி) இயக்கப்பட்டு வந்தது. 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரீப்பெய்டு  டாக்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை தனியார் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து நடத்தி வருகிறது. அதில், ஏற்கெனவே இயங்கி வந்த கருப்பு-மஞ்சள் வண்ண டாக்சிகளை இணைக்க மறுத்து விட்டனர். இதனை எதிர்த்து விமான நிலைய வாடகை கார் ஓட்டுநர்கள் சங்கம் (சிஐடியு) வழக்கு தொடுத்தது. அதனை விசாரித்த நீதிமன்றம் 25 கார்களை இணைத்துக் கொள்ள உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து விமான நிலைய ஆணை யர், சென்னை மகாநர மோட்டார் வாகன தொழி லாளர்கள் சங்கம் (சிஐடியு) பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்து, தனியார் ப்ரீபெய்ட் டாக்சி நிறுவனம் 16 கார்களை இணைத்துக் கொள்ள டாக்சி நிறுவனத்திற்கு உத்தரவிட்டார். அதனை அமல்படுத்த ப்ரீபெய்ட் டாக்சி நிறுவனம் மறுத்து வருகிறது. இந்நிலையில், உயர்நீதி மன்றம், விமான நிலைய ஆணையம், காவல்துறை யின் உத்தரவுகளை மீறி ப்ரீபெய்ட் நிர்வாகம் செயல் படுகிறது. இந்த நிறு வனத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி திங்களன்று (அக்.9) விமான நிலையம் அருகே சென்னை மகாநகர மோட்டார் வாகன தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மனு கொடுக்கும் பேரணி நடை பெற்றது. இதில் டாக்சி தொழிலாளர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். அப்போது செய்தி யாளர்களிடம் பேசிய சிஐடியு மாநிலச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன், “விமான நிலையத்திற்குள் இயக்கப்படும் வாடகை கார் கருப்பு, மஞ்சள் வண்ணத்தில் தான் இருக்க வேண்டும் என்று மோட்டார் வாகன ஆய்வாளர் உத்தர விட்டுள்ளார். அத்தகைய வண்ண கார்கள் சென்றால், ஓட்டுநர்களை ரவுடி களை வைத்து அச்சுறுத்து கின்றனர்” என்றார். இதனை தொடர்ந்து விமான நிலைய ஆணையர் தீபக், காவல்துறை உதவி ஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடை பெற்றது. இதில், தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன பொதுச் செயலாளர் வி.குப்புசாமி, சங்கத்தின் பொருளாளர் ஏ.எல்.கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.