விழுப்புரம், ஜூன் 15- விழுப்புரம் மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலாளார் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளரின் கட்டுப்பாட்டின் கீழ், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 223 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு 800க்கும் மேற்பட்ட மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த வாரம் திடீரென 50 பேர் பணியிடமாற்றமும், 10 பேர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்ட னர். இதைக் கண்டித்து விழுப்புரம் டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு திரண்ட ஊழியர்கள் காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, டாஸ்மாக் மேலாளர் விஜய சண்முகம் பேச்சுவார்த்தை நடத்தி னார். அப்போது, அரசு விதிமுறை களின்படி ஓராண்டு காலத்திற்கும் மேலாக ஒரே கடையில் பணி யாற்றியவர்கள்தான் அதிக வர்த்தகமாகும் கடைகளில் இருந்து குறைந்த வர்த்தகமாகும் கடைகளுக்கும், குறைவான வர்த்தக மாகும் கடைகளில் இருந்தவர்கள் அதிகமாக விற்பனையாகும் கடை களுக்கும் பணியிட மாறுதல் செய்துள்ளோம்” என்று மேலாளர் தெரிவித்தார் இதை ஏற்காத ஊழியர்கள் ஒரு வாரத்துக்குள் மீண்டும், பழைய இடத்திற்கு பணியிட மாறுதல் செய்யவில்லை என்றால், ஜூன் 20 முதல் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.