districts

img

தமுஎகசவின் இலக்கிய பெருவிழா

திருவள்ளூர், ஏப். 16- “அறிவு நாணயத்தின், அரிய இலக்க ணம்” டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் விழா,  தமுஎகச சார்பில் கலை இலக்கிய பெருவிழாவாக பெரியபாளையத்தில் நடை பெற்றது. அழிந்து வரும் தெருக்கூத்து கலைஞர் களை பாதுகாக்கும் வண்ணம், மெய்யூர் பவானி நாடக மன்றத்தின் தெருக்கூத்துடன் நிகழ்ச்சியுடன் விழா உற்சாகமாக துவங் கியது. கவிஞர் தேன்குமார்  கவிதைகள், தமுஎகச ராணிப்பேட்டை மாவட்டத் தலைவர் அந்திக்காற்று பாலு, தவில் ரஜினி இணைப்பில் இனிமையான கிராமியப் பாடல் கள்  மக்களை கவர்ந்தன. மெய்யூர் சிவா பம்பை உடுக்கை இசை,  உறவுகள் கிராமிய கலைக்குழுவினர்   தப்பாட்டம், ஒயிலாட்டம் நடைபெற்றது. அம்பேத்கரின் சமூக செயல்பாடு, கல்வி என்ற தலைப்பில் தமுஎகச மாநில நிர்வாகி முயற்சி முருகேசன் உரைவீச்சும் நடை பெற்றது. எல்லாபுரம் ஒன்றிய துணை பெரும் தலைவர் சுரேஷ் வாழ்த்தி பேசினார்.பள்ளி  மாணவர்களின் கராத்தே சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத்தின் ஊத்துக் கோட்டை வட்டத் தலைவர் ஓவியர் ஜி.டி.வேலுமயில் தலைமை தாங்கினார். வட்டச் செயலாளர் ம.அருணகிரி வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் பி.அருள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.சங்கத்தின் மாவட்ட  நிர்வாகிகள் தனுஷ்கோடி, பாரி, நேசன், துணை நிர்வாகிகள் கவிஞர் சி.சுரேஷ், வி.அந்தோணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வட்ட பொருளாளர் வி.தயாநிதி நன்றி கூறினார். முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட முன்னாள் செயலாளர் கே.செல்வராஜ் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணி வித்தார்.