அதிகரித்துவரும் பணி நெருக்கடிகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 முக்கிய அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் சு.பரணி தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் பொதுச் செயலாளர ச.பாரி மாவட்ட செயலாளர் ப.குணசேகரன், முன்னாள் மாநிலத் தலைவர் கே.வேதகிரி உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.