குமரி முனையில் உள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி “திருக்குறள் போட்டிகள்” என்ற தலைப்பில் . திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, கட்டுரைப் போட்டி, வரைதல் போட்டி, ஓவியப் போட்டி, குறும்படப் போட்டி, கவிதைப் போட்டி மற்றும் சுயமிப் (செல்ஃபி) போட்டி ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற 45 நபர்களுக்கு சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜன.10) நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் இரா.வைத்திநாதன்,துறைஅலுவலர்கள் மற்றும் ஊடக மைய அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.