விழுப்புரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் ஞாயிறன்று நடைபெற்ற தமிழ்நாடு அரசின் சாதனைகள் விளக்க கண்காட்சியை ஆட்சியர் சி.பழனி தொடங்கி வைத்தார். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் புகழேந்தி, மணிகண்ணன், சிவக்குமார், மாவட்ட பஞ்சாயத்து சேர்மன் ஜெயச்சந்திரன், துணை சேர்மன் ஷீலாதேவி சேரன், மக்கள் செய்தி துறை அலுவலர் வெங்கடேச பூபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.