districts

img

கர்நாடக மாநில பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியத்தின் முடிவையும், உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறி மேகேதாட்டுவில் புதிய அணை கட்டும் கர்நாடக மாநில பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கடலூர் மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன், மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன், நிர்வாகிகள் கற்பனை செல்வம், சரவணன், மூர்த்தி, வாஞ்சிநாதன், கான்சாகிப் வாய்க்கால் பாசன சங்கத் தலைவர் கண்ணன் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.