தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கும் அதேநாளில் மின் ஊழியர்களுக்கும் வழங்க வலியுறுத்தி புதனன்று (மே 11) வள்ளுவர் கோட்டம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மத்திய சென்னை கிளைத் தலைவர் வி. சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் செயலாளர் கண்ணன் உள்ளிட்டோர் பேசினர்.