1000 துணை மாநில வரி அலுவலர் பதவி உயர்வுக்கான கோப்பினை தனியாக பராமரித்து உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று (பிப்.24) ஒருங்கிணைந்த வணிக வரித்துறை மற்றும் பத்திர பதிவுத்துறை அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு வணிகவரி பணியாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ரவிராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாநில துணைத் தலைவர் டேனியல் ெஜயசிங், உதவி ஆணையர், வணிகவரி அலுவலர், துணை வணிகவரி அலுவலர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாமிநாதன் உள்ளிட்டோர் பேசினர்.