மதுராந்தகம், மே 3- மதுராந்தகம் வட்டத்தில் பணி செய்து ஓய்வு பெற்ற 9 ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில் ஆசிரியர்களாக பணி செய்து ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், க.அமுதா, ஜெ.வெங்கடேசன், ஆ.ஜெயஸ்ரீ, செ.கேத றின் சரஜா, பி.ஜான்சிராணி, டி.வேதகிரி, மா.ராதாகிருஷ்ணன், வை.உமா, இரா.சாந்தி உள்ளிட்ட தலைமை ஆசிரியர்கள் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மதுராந்தகம் கிளையின் சார்பில் பணி நிறைவு பாராட்டு விழா வட்டார தலைவர் ஆ.ரா.வனஜா தலைமையில் நடைபெற்றது. வட்டார மகளிர் அணி தலைவர் ச.அம்பினா வரவேற்றார் வட்டார செயலாளர் சா.கலைக்குமார் செயலர் அறிக் கையும் வட்டார பொருளாளர் நா.கோபால் நிதி அறிக்கையும் சமர்பித்தனர். பணி நிறைவு செய்த ஆசிரியர்களுக்கு பாராட்டு கேடயங்களை வழங்கி கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில், மாநில துணைப் பொதுச் செயலாளர் தா.கணேசன், மாநில பொருளாளர் ஜே.மத்தேயு, மாநில துணைத் தலைவர் பெ.அலோசியஸ் துரைராஜ், முன்னாள் மாநில தலைவர் மா.ச.முனுசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.வரதன், மாவட்ட தலைவர் ந.மகாலட்சுமி, மூ.சீனுவாசன், மாவட்ட பொருளாளர், இரா.ஞானசேகரன் உள்ளிட்ட பலர் கருத்துரை வழங்கினர்.