districts

img

தாம்பரம் மாநகராட்சி தொழிலாளர்கள் சங்க பேரவை

சென்னை, மார்ச் 3 – தாம்பரம் மாநகராட்சி தொழிலாளர்கள் சங்கத்தின்  முதலாவது பேரவை வியாழனன்று (மார்ச் 2) தாம்பரத்தில் நடைபெற்றது.  இந்த பேரவையில், ஒப்பந்த ஊழியர்களுக்கு  மாதம் தோறும் 5ந் தேதி சம்பளம் வழங்க வேண்டும்,  ஊழியர் களிடம் இஎஸ்ஐ, பிஎப் பிடித்தம் செய்ய வேண்டும்,  குடிநீர் ஏற்றும் ஊழியர்கள், பூங்கா காவலர்கள், ஜேசிபி ஓட்டுநர்கள், பரப்புரை யாளர்கள் உள்ளிட்டோ ருக்கு 2 மாதமாக வழங்கப் படாமல் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  பேரவைக்கு கு.ராஜன் மணி தலைமை தாங்கினார். செயலாளர் என்.கிருஷ்ண மூர்த்தி வேலை அறிக் கையை சமர்ப்பித்தார். சிஐ டியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன் உள்ளி ட்டோர் பேசினர்.  சங்கத்தின் தலைவராக கு.ராஜன்மணி, பொதுச் செயலாளராக கே.சி.முரு கேசன், பொருளாளராக இ.குழந்தைசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.