districts

பள்ளி மாணவியை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

சென்னை,பிப்.16-  சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் பெண் ஒருவர் தனது மகளுடன் வசித்து வருகிறார்.   இவருடைய மகள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக்  கொண்டிருந்தார். கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நேரத்தில் சிறுமியை அவருடைய பாட்டி வீட்டில் தங்க வைத்தார்.  அப்போது உறவினரான கார்த்திக் ராகவன் என்பவர் சிறுமியிடம் பழகி செல்போனில் பப்ஜி ஆன்லைன் விளையாட்டு பதிவிறக்கம் செய்து கொடுத்து அதில் விளையாட சொல்லிக் கொடுத்துள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட கார்த்திக் ராகவன் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். சிறுமியின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்தும் மிரட்டியுள்ளார். ஆபாசமாக வீடியோ எடுத்து சிறுமியின் தொலைபேசி எண்ணிற்கு அனுப்பினார். அதிர்ச்சி அடைந்த சிறுமி என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போனார். இது தொடர்பாக தாயிடம் சொன்னால் கண்டிப்பார் என்ற பயத்தில் கார்த்திக் ராகவனிடம் கெஞ்சியுள்ளார். இதனை சாதக மாக பயன்படுத்திக் கொண்ட கார்த்திக் ராகவன் தொடர்ச்சியாக சிறுமிக்கு பாலியல்  தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் இதுபோன்ற பாலியல் சீண்டல் செய்வதை பெற்றோரிடம் தெரிவித்தால் உன் மீதும், உன் தாய் மீதும் ஆசிட் அடித்து விடுவேன் என மிரட்டி பலமுறை பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.. இதனால் மனம் உடைந்த சிறுமி பள்ளிக்கு சரியாக செல்லாமல் இருந்தார். இது அவருடைய தாய்க்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. சிறுமி யின் தாய் தனது தோழியிடம் இதுகுறித்து தெரிவித்தபோது. அவர் அந்த சிறுமியை தனியாக அழைத்து பேசியபோது  சிறுமி அழுது கொண்டு நடந்ததை கூறினார். இது பற்றி கடந்த 2021-ம் ஆண்டு கீழ்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று தாய் புகார் மனு அளித்தார். ஆனால் நடவடிக்கை எடுக்க வில்லை. பின்னர் சிறுமியின் தாயார்  நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக துணிச்ச லாக  உயர்நீதிமன்றத்தை நாடினார். கடந்த  10 நாட்களுக்கு முன்பு நடந்ததை அனைத்தும்  ஒப்பிட்டு பார்த்து கார்த்திக் ராகவன் குற்றம் செய்திருப்பது உறுதியானதையடுத்து அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு  பிறப்பித்தது. அந்த உத்தரவின் அடிப்படை யில் 10 நாட்களுக்கு பிறகு கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் கார்த்திக் ராகவனை கைது செய்தனர்.

;