சென்னை, ஜூன் 1- சென்னை மாநகராட்சிக் குட்பட்ட 15 மண்டலங்க ளிலும் நாள்தோறும் சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக் கப்படுகின்றன. ஒவ்வொரு வார்டிலும் சுகாதார ஆய்வாளர்கள் தலைமையிலான குழுவினர் அங்காடிகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சோதனை நடத்தி, தடை செய்யப் பட்ட பிளாஸ்டிக் பொருட் களை பறிமுதல் செய்வது டன், அதன் உரிமையாளர்க ளுக்கு அபராதம் விதித்தும் வருகின்றனர். கடந்த 15 நாட்களில் மட்டும் 3,020 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப் பட்ட கடை உரிமையாளர் களுக்கு ரூ.12,44,300 அபராதம் விதிக்கப்பட் டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்க்க மாநகராட்சியால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் நாள் தோறும் சேகரமாகும் குப்பை களில் பிளாஸ்டிக் கழிவு அதிகரித்து வருகின்றன. அவ்வாறு சேகரமாகும் பிளாஸ்டிக் கழிவுகள் தனியாக பிரித்தெடுக்கப் பட்டு, இயந்திரங்களை பயன்படுத்தி பண்டல்க ளாக கட்டப்பட்டு மறுசுழற்சி யாளர்களுக்கு வழங்கப் பட்டு வருகிறது. அதன்படி, 15 மண்டலங்களிலும் நாள்தோறும் குப்பையில் இருந்து பிரித்து எடுக்கப் படும் சுமார் 40 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் மறுசுழற்சி யாளர்கள் மற்றும் சிமெண்ட் ஆலைகளுக்கு வழங்கப்படு கிறது என்று சென்னை மாநக ராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.