பட்டியலின மக்களுக்கு தொகுப்பு வீடுகளை கட்டி கொடுக்க வேண்டும் புதுச்சேரி அரசுக்கு தீ.ஒ.மு வலியுறுத்தல்
புதுச்சேரி, அக்.9- வீடற்ற பட்டியலின மக்களுக்கு தொகுப்பு வீடுகளை கட்டி கொடுக்க வேண்டும் என்று புதுச்சேரி அரசை தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தி யுள்ளது. புதுச்சேரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலக் குழு கூட்டம் தலை வர் கொளஞ்சியப்பன் தலைமையில் ரெட்டியார் பாளையத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கூட்டத்தில் மாநிலச் செயலாளர் சரவணன், பொருளாளர் உமா, துணை தலைவர் குப்புசாமி உட்பட பலர் பங்கேற்றனர். உயர்நீதிமன்றம் தீர்ப்பின்படி புதுச்சேரி அரசு சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்ட தாய் வழி சாதி சான்றிதழ் வழங்கும் முறையை தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்கிறது. மாநிலத்தில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு தங்கும் விடுதிகள் சேதமடைந்துள்ளது. இதை போர்கால அடிப்படையில் சீர்செய்து கொடுக்க வேண்டும். விடுதிகளை மாணவர்களுக்கு ஏற்றாற் போல் வடி வமைத்து வழங்க வலியுறுத்தி வரும் நவ.5அன்றுஆதிதிராவிடர் நலத்துறை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் சிறப்பு கூறு நிதியை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்க வேண்டும். கிருமாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் இலவச திருமண மண்டபத்தை பட்டியலின மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். காட்டேரிக்குப்பம் பகுதியில் கட்டப்பட்டுவரும் கழிப்பறைகளை விரைந்து கட்டிமுடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பிரெஞ்சு துணை தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் !
புதுச்சேரி, அக்.9- புதுச்சேரி கடற்கரைச் சாலை தலைமை செயலகம் அருகில் உள்ள மரைன் வீதியில் பிரெஞ்சு நாட்டு துணைத் தூதரகம்உள்ளது. இங்கு பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்ற வர்களுக்கான சான்று சரி பார்ப்பு மற்றும் அந்நாட்டு க்குச் செல்வதற்கான அனு மதி வழங்குதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. துணைத் தூதரகத்தில் 40 க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் தூத ரகத்தின் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடி குண்டுமிரட்டல் வந்ததாகக் கூறப்படுகிறது.மிரட்டல் தொடர்பாக பெரிய கடை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வெடி குண்டு நிபுணர்கள், வெடி குண்டு கண்டறியும் பிரிவி னர், மோப்ப நாய்கள் மற்றும் தீயணைப்பு துறை யினர் தூதரகத்தில் சோதனையில் ஈடுபட தயாரானார்கள். அப்போது தூதரகத்தினர் சென்னையில் உள்ள பிரான்ஸ் நாட்டு தூதரக அதி காரிகள் அனுமதி அளித்த பிறகே காவல்துறைக்கு அனுமதி அளிக்கப்படும் என்றனர். உடனே காவல்துறையி னர், அனுமதிக்கு காத்தி ருந்தால் விபரீதம் ஏதும் நிகழும் நிலையை விளக்கி னர். அதையடுத்தே தூதரக அதிகாரிகள் காவல் துறையினரை சோதனை யில் ஈடுபட அனுமதித்த னர். அதனைத் தொட ர்ந்து தூதரகத்தில் உள்ள அறைகளில் அறை வெடிகுண்டு சோதனை நடைபெற்றது. சோதனையில் ஏதும் சிக்கவில்லை. வெடி குண்டு மிரட்டல் புரளி என பின்னர் தெரியவந்தது.
தங்கம் விலை கனிசமாக குறைந்தது
சென்னை, அக்.9- தங்கம் விலை வியாழ னன்று அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.7,030, க்கும் சவ ரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.56,240-க்கு விற்பனையாகிறது. தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு இரண்டு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.100-க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்துக்கும் விற்பனை யாகிறது.
ரூட்தல மோதலில் மாநில கல்லூரி மாணவர் பலி
சென்னை, அக்.9- சென்னையில் பேருந்து மற்றும் ரயிலில் பயணிக்கும் போது கல்லூரி மாணவர்களிடையே ரூட் தல தொடர்பாக மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில் கல்லூரி மாணவர் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சில நாட்களுக்கு முன்னர் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் மாநில கல்லூரி மாணவர் சுந்தர் மீது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் கொடூரமாக தாக்கப்பட்ட சுந்தர், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மோதல் தொடர்பாக பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த 5 பேரை போலீசார் ஏற்கெனவே கைது செய்திருந்தனர். இதற்கிடையே, சுந்தர் தாக்கப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. ரூட் தல என தொடர்ந்து மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.