districts

இளம்பெண் சாவில் சந்தேகம்: உறவினர்கள் மறியல்

வந்தவாசி, மே 21- இளம்பெண் சாவில் சந்தேகம் இருப்ப தாக கூறி வந்தவாசியில் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்த வாசி அடுத்த ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் இவரது மனைவி கோகிலா (22). இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. சக்திவேலுக்கு கோகிலாவுக்கு அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.  இந்த நிலையில், கோகிலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கோகிலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  கோகிலாவின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் அவரது உடம்பில் பல இடங்களில்  காயங்கள் இருப்பதாகவும் வரதட்சனை கொடுமையால் தான் கோகிலா இறந்ததாக  கூறி உறவினர்கள் வந்தவாசி அரசு மருத்துவமனை எதிரே மேல்மருவத்தூர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.