தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இரண்டு ஆண்டுகள் நடத்திய குடும்ப நலம் பற்றிய கணக்கெடுப்பு ஆய்வு அறிக்கையை எஸ்ஆர்எம் பொது சுகாதார பள்ளி வெளியிட்டது. இதனை கோவிட் 19 க்கான தமிழ்நாடு முதலமைச்சரின் உயர்மட்ட ஆலோசனை குழு உறுப்பினர் டாக்டர் பி.குகானந்தம் வெளியிட்டார். நிகழ்ச்சியில் எஸ் ஆர் எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவன துணை வேந்தர் முனைவர் சி. முத்தமிழ்செல்வன் ,இணை துணை வேந்தர் லெப்டினெண்ட் கர்னல் டாக்டர் ஏ. ரவிக்குமார், மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் சுந்தரம், எஸ்ஆர்எம் பொது சுகாதார பள்ளி முதல்வர் பத்மா வெங்கட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.