திருவள்ளூர், மார்ச் 7- சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெற்குன்றம் ஊராட்சியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட பனை விதை இரண்டு அடி உயரத்திற்கு வளர்ந்து இருந்தது. அது தற்போது திடீர் பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்டு காணப்பட்டது. இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட தோட்டக்கலை துறை உதவி இயக்குநருக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து, சோழவரம் ஒன்றிய தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திவ்யா வியாழனன்று (மார்ச் 7), நெற்குன்றம் ஊராட்சிக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட பனைச் செடிகளை ஆய்வு செய்தார். பின்னர், ஊராட்சி மன்ற தலைவர் பாபு, பணிதள பொறுப்பாளர்களிடமும் செடியை பராமரிப்பது குறித்தும் கையாளும் முறை குறித்தும் அறிவுரை வழங்கினார்.