districts

img

கிணறு அமைக்கும் பணி: கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஆய்வு

கள்ளக்குறிச்சி செப் 25 -  கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை ஒன்றியம், பிடாகம் ஊராட்சிமன்றம் பிடாகம் கிராமத்தில் 15வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.9.69 லட்சத்தில் கிணறு அமைத்தல் பணி நடந்து வருகிறது. பிடாகம் காவல் நிலையம் பின்புறம் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நூலகத்திற்கு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.  கீழப்பாளையம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.12.25 லட்சம் மதிப்பீட்டில்  புதியதாக கிணறும் அமைக்கப்பட்டு வரு கிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அரசின் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் அரசு அலுவலர்கள் தொடர்ந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றார்.