districts

img

‘வர்தாம் மின்ட்’ கட்டுமான நிறுவனத்திலிருந்து வெளியேறும் உபரி நீர் மழை நீர் கால்வாயில் இணைக்கப்பட்டுள்ளதை தடுக்க வேண்டும்

ராயபுரம் 53ஆவது வட்டத்தில் ‘வர்தாம் மின்ட்’ கட்டுமான நிறுவனத்திலிருந்து வெளியேறும் உபரி நீர் மழை நீர் கால்வாயில் இணைக்கப்பட்டுள்ளதை தடுக்க வேண்டும், குடிநீர் வாரியத்தில் நிரந்தர உதவி பொறியாளரை நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  பகுதி குழு உறுப்பினர் ச.முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், செயற்குழு உறுப்பினர் ஆர்.லொகநாதன், பகுதிச் செயலாளர் எஸ்.பவானி, பகுதிக்குழு உறுப்பினர்கள் டி.வெங்கட், எம்.அண்ணாமலை, ஜெயவேல் ஆகியோர் பேசினர்.