திருக்கோவிலூர், மே 14-
தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை ஒருங்கி ணைந்த விழுப்புரம், கள்ளக் குறிச்சி மாவட்ட நூலக ஆணைக் குழுவின் கீழ் இயங்கும் மணலூர்ப் பேட்டை கிளை நூலகத்தில் மே 31 வரை தொடர்ந்து தினம் ஒரு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அடிப்படை கணினி பயிற்சி, கதை சொல்லுதல், வாசிப்பு பழக்கம், வண்ணம் தீட்டுதல், சொற்களை உரு வாக்குதல், குழு விளை யாட்டுகள் என ஒவ்வொரு நாளும் தினம் ஒரு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இதில், மே 14 அன்று சிறு வர்களுக்கு எளிய முறை யில் ஓவியம் வரைதல் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு நல்நூல கர் மு.அன்பழகன் தலைமை தாங்கினார். நூலக தன்னார் வலர் கி.பாஸ்கரன் வரவேற்றார்.
சிறுவர்களிடத்தில் ஓவி யம் உருவாக்கும் விதம் பற்றியும் எண்களைக் கொண்டு மிக எளிய முறை யில் ஓவியம் வரைதல் பற்றி யும் அரசுப்பள்ளி ஓவிய ஆசிரியர் இரா.பன்னீர் செல்வம் பயிற்சி அளித்தார். உடற்கல்வி இயக்குநர் எம்.பாலாஜி, ஓவியம் வரை வதற்கான அனைத்து உபகரணங்களையும் நன்கொடையாக வழங்கி பயிற்சியில் கலந்து கொண்ட சிறுவர்களை பாராட்டிப் பேசினார். நூலக தன்னார் வலர் பெ.விக்னேஷ் நன்றி கூறினார்.