districts

சென்னை முக்கிய செய்திகள்

சென்னையில் பொங்கல் பண்டிகை: விற்பனைக்கு குவிந்த கரும்பு-மஞ்சள்

சென்னை,ஜன.11- பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி (திங்கட்கிழமை)கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி கரும்பு மஞ்சள் கொத்து,இஞ்சி கொத்து உள்ளிட்ட பொங்கல் பொருட்கள்அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்கி சென்றிட வசதியாக கோயம்பேடு மார்கெட்டில் சிறப்பு சந்தை தொடங்கப்பட்டுள்ளது.போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக மார்கெட் பின்புறம் உள்ள "ஏ" சாலை மற்றும் மளிகை மார்க்கெட் வளாகம் என 2 இடங்களாக பிரிக்கப்பட்டு சிறப்பு சந்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் கோயம்பேடு மார்கெட்டில் செயல்படும்பொங்கல் சிறப்பு சந்தைக்கு கரும்பு, மஞ்சள் கொத்துக்கள் அதிகஅளவு விற்பனைக்கு வரத்தொடங்கி உள்ளன.  புதனன்று  நள்ளிரவில் 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்பு விற்பனைக்கு குவிந்துள்ளது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பகுதியிலிருந்து 6-க்கும் மேற்பட்ட மினி வேன்கள் மூலம் மஞ்சள் கொத்து விற்பனைக்கு வர தொடங்கி உள்ளது. இதனால் சிறப்பு சந்தையில் பொங்கல் பொருட்கள் விற்பனை களை கட்ட தொடங்கி உள்ளனர். வெள்ளி நள்ளிரவு முதல் விழுப்புரம், கடலூர், பாண்டிச்சேரி, சேலம் ஆகிய பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்பு விற்பனைக்கு குவியும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். வியாழனன்று காலை சிறப்பு சந்தையில் 15 கரும்புகள் கொண்ட ஒருகட்டு கரும்பு ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது. 10 எண்ணிக்கை கொண்ட மஞ்சள் கொத்து ரூ.120 வரை விற்பனை ஆகிறது.

விழுப்புரம் கோட்டத்தில் 1,629 சிறப்புப் பேருந்துகள்

விழுப்புரம்,ஜன.11- பொங்கல் பண்டிகையையொட்டி, பொதுமக்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் சார்பில் 1,629 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதுகுறித்து இந்தக் கோட்ட மேலாண் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜ்மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு:- பொங்கல் பண்டிகை மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களில் பயணிகள் போக்குவரத்து அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஜனவரி 12, 13, 14 ஆகிய தேதிகளில் சென்னை  கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து  பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள்  காட்டிலும் கூடுதலாக 12 ஆம் தேதி 539  சிறப்புப் பேருந்துகள் வருகிற 13,14 ஆகிய  தேதிகளில் 1090 சிறப்புப் பேருந்துகளும்  என மொத்தம் 1,629 சிறப்புப் பேருந்துகள் திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, விருத்தாச லம், திருவண்ணாமலை, போளூர், ஓசூர், வேலூர், ஆரணி, திருப்பத்தூர், புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும். மேலும் சிதம்பரம், தருமபுரி, ஓசூர்,  நெய்வேலி, புதுச்சேரி, சேலம், திருவண்ணா மலை, திருச்சி, வேலூர் ஆகிய பகுதி களுக்கு செல்ல அரசுப் போக்குவரத்துக் கழக இணையதளத்தில் முன்பதிவு செய்து சிறப்புப் பேருந்துகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.  பயணிகள் அடர்வு குறையும் வரை தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்கவும், பேருந்துகளின் இயக்கத்தை கண்காணித்திட வும் தேவையான அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

கடலூர், ஜன.11- கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ் அழிஞ்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்த விவசாயி சீனு. தனது விவசாய நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டி மதலப்பட்டு  கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரனிடம் மனு அளித்தார்.  அப்போது, கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் நிலத்திற்கு பட்டா பெயர் மாற்ற வேண்டுமானால் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி  அடைந்த சீனு,பேரம் பேசி ரூ. 40 ஆயிரம் கொடுப்பதாக கூறியுள்ளார். ஆனால், கிராம நிர்வாக அலுவலர் உடன்பட வில்லை. இதனால் மன உளைச்சல் அடைந்த சீனு, கடலூர் லஞ்ச  ஒழிப்புத்துறை காவல்துறையினருக்கு புகார் அளித்தார். அதன்பேரில் கடலூர் லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையில் காவலர்கள் ரசாயனம் தெளிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை சீனுவிடம் வழங்கினர். அதை கிராம நிர்வாக அதிகாரி பிரபாகரனிடம் கொடுத்தார். அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் பிரபாகரனை கையும் களவுமாக பிடித்தனர். இதனை தொடர்ந்து, கடலூர் வட்டாட்சியர் அலுவல கத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

மின்னஞ்சலில் பாலியல் துன்புறுத்தல்: பிரதமர் மோடி - உதயநிதிக்கு புகார்

புதுச்சேரி,ஜன.11- மின்னஞ்சலில் பாலியல் துன்புறுத்தல் கடிதம் வந்தது தொடர்பாக புகார் தந்து  3 மாதங்களாகியும் நடவடிக்கை இல்லாத தால் ஜிப்மர் குடியுரிமை மருத்துவர் பிரதமருக்கு புகார் அனுப்பியுள்ளார்.  ஒன்றிய அரசின் முக்கிய மருத்துவமனை களில் ஒன்றான ஜிப்மர் புதுச்சேரியில் உள்ளது. இங்கு மருத்துவப் பட்டப்படிப்பு முடித்துவிட்டு முதுகலை பட்டப்படிப்புக்கு (எம்டி) மருந்தியல் துறையில் மரு. ரோஷா சந்தேஷ் இருக்கிறார். அவர் பிரதமர்  மோடி, துணை நிலை ஆளுநர் தமிழிசை,  இந்திய மருத்துவ கவுன்சில், சுகாதாரத் துறை, தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் உள்ளிட்டோருக்கு இணையத்தில் ஒரு புகார் கடிதம் அனுப்பியுள்ளார். அதன் விவரம் வருமாறு:-  எனக்கு புதுச்சேரி ஜிப்மர், மருந்தியல் துறையின் ஆசிரியர்களுக்கான மின்னஞ்சல் முகவரிக்கு பாலியல் துன்புறுத்தல் கடிதம் கடந்த ஆண்டு செப்டம்பரில் வந்தது.  இதில் ஒவ்வொரு வெள்ளியன்று நடைமுறை வகுப்புக்குப் பிறகு தன்னை தனியாக சந்திக்க வேண்டும்.  எம்டி இறுதி தேர்வில் முதல் முயற்சியில் தேர்ச்சி பெறவும், குடியுரிமை மருத்துவர் பதவிக்காலம் நிறைவு செய்யவும் பாலியல் இச்சைக்கு உடன்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு உடன் படாவிட்டால் இதர குடியுரிமை மருத்துவர் கள் முன்பு துன்புறுத்துவேன். எம்டி இறுதி தேர்வுகளில் வெல்ல அனுமதிக்க மாட்டேன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல், மற்றவருக்கும் வந்திருந்தது. இதுபற்றி ஜிப்மர் இயக்கு நரிடம் புகார் தெரிவித்தேன். இது பெரிய விஷயமில்லை எனக் குறிப்பிட்டு புகாரை கூட வாங்க மறுத்துவிட்டார்.  பெண்களுக்கான உள் புகார் குழுவில்  புகார் தந்தேன். அத்துடன் சைபர் குற்றப் பிரிவுக்கும் புகார் தந்தேன். மின்னஞ்சல் முகவரி மூலம் கண்டறிய எங்களால் இயல வில்லை. புகார் தந்தும், இச்சம்பவம் நிகழ்ந்தும் மூன்று மாதங்களாகிவிட்டன. கடிதத்தை எங்களை அறிந்தவர் தான் அனுப்பியிருக்க வேண்டும். அவர்  யாரென்று அறிய இயலாமல் அவர் மத்தி யில் நாங்கள் உள்ளோம். இதில் நடவடிக்கை தேவை. ஆனால் பிரதமர்,  ஆளுநர் உள்ளிட்டோருக்கு புகார் கடிதம் இணையத்தில் எக்ஸ் தளத்தில் அனுப்பியுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக மேல் விசார ணைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்