கள்ளக்குறிச்சி,செப். 1- தரணி ஆலை விவசாயிகளுக்கு தர வேண்டிய கரும்பு பண பாக்கியை வட்டி யுடன் வழங்கிட கோரி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்திற்கு ஆலை சங்கத் தலைவர் ரகுராமன் தலைமை தாங்கினார். தியாகதுருகம் கலைய நல்லூர் தரணி சர்க்கரை ஆலை கடந்த 5 ஆண்டுகளாக செயல்படவில்லை. மேலும் ஆலை நிர்வாகம் வாகன வாடகை, நிலுவைத்தொகை பாக்கி என ரூ.88.19 கோடியை விவசாயிகளுக்கு தராமல் மோசடி செய்து விட்டது. சட்டப்படி நடவடிக்கை எடுத்து விவசாயி களுக்கு கிடைக்கவேண்டிய கரும்புக்கான தொகையை பெற்றுத்தர மாநில, மாவட்ட நிர்வாகமும் தவறிவிட்டது. தற்போது தேசிய கடன் தீர்ப்பாயத்திற்கு சென்று தீர்ப்பு நிலுவையிலுள்ள நிலையில் விவ சாயிகளின் கோரிக்கைகளை மாநில அரசு தலையிட்டு நிறைவேற்றி தர வேண்டும், 2018-19 ஆண்டுக்கான கரும்பு பணபாக்கி ரூ.27.86 கோடியை 15விழுக்காடு வட்டி யுடன் வழங்க வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன் ஆலை சங்க செயலாளர் அருள்தாஸ், பொருளாளர் சாந்த மூர்த்தி, தலைவர் வேல்மாறன். சிபிஎம் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் ஜெய்சங்கர், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏழுமலை, செயலாளர் ஸ்டாலின் மணி, பொருளாளர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.