districts

img

குண்டும் குழியுமான சாலைகள்: அவதிக்குள்ளாகும் பிஎஸ் பாளைய மக்கள்

புதுச்சேரி,டிச.6- புதுச்சேரி மண்ணாடிப்பட்டு கொம்யூன் பகுதிக்குட்பட்ட பி.எஸ்.பாளையத்தில் திருக்கனூர் செல்லும் சாலை குண்டும் குழியுமாக காட்சியளித்து வருகிறது. இந்த சாலையை போர்கால அடிப்படையில் சீரமைத்து தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்குமாரன் தலைமை தாங்கினார். பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம்,செயற்குழு உறுப்பினர் சீனிவாசன்,கொம்யூன் செயலாளர் இரகு. அன்புமணி,பிரதேசக்குழு உறுப்பினர்கள் சங்கர்,உலகநாதன் மற்றும் கொம்யூன்குழு உறுப்பினர்கள் முத்து,விநாயகம்,தட்சணாமூர்த்தி,மாசார்கான் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.