districts

திருநங்கை மீது திடீர் தாக்குதல்

காஞ்சிபுரம். மே 20-

     காஞ்சிபுரம் பேருந்து நிலையம் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் முக்கிய மான பகுதியாக விளங்கி வருகின்றது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அஞ்சலி என்ற 27 வயதுடைய திருநங்கை காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்அம்பி பகுதியில் சக திருநங்கைகளுடன் வசித்து வருகிறார்.

   அஞ்சலி கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் ஆணாக இருந்து திருநங்கை யாக மாறி உள்ளார். இந்நிலையில் வெள்ளிக் கிழமை இரவு  மக்கள் அதிக நடமாட்டம் உள்ள  பேருந்து  நிலையத்தின் உள்ளே முகக்கவசம் அணிந்த மர்ம வாலிபர் ஒரு வர் திடீரென அஞ்சலி மீது பாய்ந்து அரிவா ளால் கழுத்தில் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டார். அஞ்சலியின் கதறலை கண்டு பேருந்து  நிலையத்தில் இருந்த வர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

  அஞ்சலியை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது. இதுதொடர்பாக சிவ காஞ்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றார்கள்.