districts

சாத்தாங்காட்டில் வெளியூர் பேருந்து நிலையம் அமைக்க ஆய்வு : அமைச்சர் சேகர்பாபு

சென்னை.டிச.23-  திருவொற்றியூர், சாத்தாங்காடு பகுதி யில் காலி இடங்களில் இருந்தால் வெளியூர் பேருந்து நிலையம் அமைக்க ஆய்வு செய்ய ப்படும் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார். சாந்தாங்காடு இரும்பு மொத்த வர்த்தக பகுதியை வெள்ளிக்கிழமை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறிய தாவது: சென்னை பாரிமுனையில் இருந்த இரும்பு சம்பந்தப்பட்ட வணிகத்தை சாத்தாங் காடு ஸ்டீல் யார்டுக்கு மாற்றம் செய்து 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் போதிய வளர்ச்சி பெறவில்லை. 203 ஏக்கரில் இந்த  இடம் ரூ.17 கோடியில் அப்போது ஆரம்பிக் கப்பட்டது. 850 மனைகளில் 719 மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 131 மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட வில்லை. 184 பேர் பதிவு செய்த பின்பும் வாங்காமல் உள்ளனர். அவர்களுக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு வழங்கப்படும். அதன் பின் இது பொது ஏலத்திற்கு விடப்படும். திருவொற்றியூர் பகுதியில் காலியிடங்கள் இருந்தால் அங்கும் வெளியூர் பேருந்து நிலையம் அமைக்க ஆய்வுகள் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.