districts

நாட்டுக் கோழிப் பண்ணைக்கு மானியம்

விழுப்புரம், ஜூலை 30-

     விழுப்புரம் மாவட்டத்தில் நாட்டுக் கோழி பண்ணை அமைக்க 50 விழுக்காடு மானியம் வழங்கப்படும் என ஆட்சியர் தெரி வித்துள்ளார்.

     தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள் பிரிவு)  நாட்டுக் கோழி பண்ணை அமைக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.  

     விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பு நிதி யாண்டில் 50 விழுக்காடு மானியத்துடன் இத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக மாவட்டத்தில் 3 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

     கோழி வளர்ப்பில் ஆர்வமுள்ள, விருப்ப முள்ள விவசாயிகள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். 250 கோழிகள் வளர்க்க கூடிய கோழிப்பண்ணை அமைக்க குறைந்த பட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும்.   இப்பகுதி மனித குடியிருப்புகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்,

     பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவ ராக இருக்க வேண்டும். விதவைகள், கண வனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதர வற்றோர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளி களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் 30 விழுக்காடு தாழ்த்தப்பட்ட, பழங்குடி யினத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இதற்கு முன் அரசு வழங்கிய கோழி வளர்ப்பு திட்டத்தில் பயனடைந்த வராக இருத்தல் கூடாது.  

   கோழிக் கொட்டகை, கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு (தீவனத்தட்டு மற்றும் தண்ணீர் வைக்கும் தட்டு), 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு (கோழி வளரும் வரை) ஆகிய வற்றுக்கான மொத்த செலவில் 50 விழுக்காடு மானியமாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 625 மாநில அரசால் வழங்கப்படும்.

    இத்திட்டத்தில் மீதமுள்ள 50 விழுக்காடு பங்களிப்பை வங்கி கடன் மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதாரங்கள் மூல மாகவோ திரட்ட வேண்டும். ஒவ்வொரு பயனாளிகளுக்கும் 250 எண்ணிக்கை யிலான 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் ஓசூர் மாவட்ட கால்நடை பண்ணை யிலிருந்து இலவசமாக வழங்கப்படும்.

    விண்ணப்பிக்கும் பயனாளிகள், விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் இடத்தித் கான சிட்டா, அடங்கல் நகல், 50 விழுக்காடு தொகை ஆதார ஆவணங்கள் வங்கி இருப்பு விவரம், வங்கி கடன் ஒப்புதல் விவரம், பயனாளி கோழிப்பண்ணையை தொடர்ந்து 3 வருடங்களுக்கு குறையாமல் பராமரிக்க உத்தரவாத கடிதம் மற்றும் 2022-23 ஆம் ஆண்டிற்கான நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயனடைய வில்லை என்பதற்கான சான்றிதழ் அளித்தல் வேண்டும்.

     இத்திட்டத்தில் சேர விருப்பமுள்ள பயனாளிகள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையை, கால்நடை மருந்தகத்தை அணுகி விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் 4.8.2023-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.