புதுச்சேரி,ஜன.23- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 127 வது பிறந்த நாளையொட்டி புதுச்சேரி அரசு சார்பில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, லாசுப்பேட்டை உழவர் சந்தை சந்திப்பில் அமைந்துள்ள அவரது சிலைக்கு சட்டப் பேரவைத் தலைவர் ஆர். செல்வம், மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சாய் ஜெ. சரவணகுமார், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம் (எ) ஏ.கே.டி, சட்ட மன்ற உறுப்பினர் தட்சிணாமூர்த்தி ஆகி யோர் கலந்து கொண்டனர். இதேபோல் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் நேதாஜி சிலைக்கு மரியாதை செலுத்தினார்.