districts

அறிவுசார் மையத்தில் கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஆய்வு

கள்ளக்குறிச்சி, டிச.24 - உளுந்தூர்பேட்டை நகராட்சியில் திருவெண்ணைநல்லூர் ரோட்டில் அமைந்துள்ள போட்டித் தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கான அறிவுசார் மையம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது அதனை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாத் ஆய்வு மேற்கொண்டார்.  ஆன்லைன் முறையில் போட்டி தேர்வுகளுக்கான வகுப்புகள் நடைபெறும் முறைகள் குறித்தும் அதற்கான கணினியின் பயன்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து விருத்தாச்சலம் சாலையில் புதிதாக ரவுண்டானா அமைப்பதற்கான இடத்தையும் பார்வையிட்டதோடு உளுந்தூர்பேட்டை நகராட்சியில் 6 வார்டுகளுக்கு குடிநீர் வழங்கி வந்த கிணறு தற்போது பெய்த கனமழையில் சுற்றுச் சுவர்கள் இடிந்து விழுந்ததாலும் ஏரியில் நீர் நிரம்பி இருப்பதாலும் தற்போது குடிநீர் வழங்க முடியாத நிலை உள்ளது. இந்த கிணற்றினை சீரமைக்கும் பணிக்காக மாவட்ட ஆட்சியர்  நேரில் பார்வையிட்டார், மேலும், இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட நகர் விமான ஓடுதளத்தில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் அங்கு விமான ஓடுதளத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து ஆலோசனை செய்தார். இந்த ஆய்வின் போது உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜெ.மணிகண்ணன், உளுந்தூர்பேட்டை நகர மன்றத் தலைவர் திருநாவுக்கரசு, வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன், நகராட்சி ஆணையர் இளவரசன்,நகராட்சி பொறியாளர் தேவநாதன்,மேற்பார்வை பொறியாளர் சாம்பசிவம், மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.