வடகிழக்கு பருவமழை எதிர்கொள்வது குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாயன்று(அக் 11) பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் நடைபெற்றது. இவ்வாய்வுக் கூட்டத்தில் அனைத்து வட்டாட்சியர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சித் துறை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட அனைத்து துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.