districts

img

யோகா பயிற்சியில் மாணவர்கள் உலக சாதனை

திருவள்ளூர்,ஜன.17- யோகா பயிற்சி மையத்தில் 105 மாணவர்கள் ஒரே நேரத்தில் தொடர்ந்து 10 நிமிடங்கள், ஏக பாத ராஜ கபோடாசனத்தில் நின்று உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர். பொங்கல் திருநாளை முன்னிட்டு கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மையம் மற்றும் இந்தியன் யோகா அசோசியேஷன், தமிழ்நாடு பிரிவு இணைந்து, யோகா உலக சாதனை நிகழ்வை நடத்தினர். கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் சிவகுமார் தலைமையில் நடந்த இந்நிகழ்வில், வேல்ஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் டீன் டாக்டர் குமுதா லிங்கராஜ் பங்கேற்றார். யோகா மைய நிறுவனர் மற்றும் பயிற்சியாளரான சந்தியா மேற்பார்வையில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. இவர்களது சாதனை  இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்’ புத்தகத்தில் இடம் பிடித்தது. சாதனை படைத்த பயிற்சி மையத்திற்கும், மாணவர்களுக்கும் பதக்கம் மற்றும் உலக சாதனைக்கான பட்டயம் வழங்கப்பட்டது. நிகழ்வில், 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.