districts

img

சென்னை பல்கலையில் இறுதியாண்டு தேர்வு முடிவுகளை வெளியிடுக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, ஆக. 14 -

      இளங்கலை மாணவர்களின் இறுதி யாண்டு தேர்வு முடிவுகளை வெளியிடக் கோரி திங்களன்று (ஆக.14) சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ், 129க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்த கல்லூரிகளில் பயின்ற இறுதியாண்டு மாணவர்களின் தேர்வு முடிவுகளை பல்கலைக்கழகம் வெளி யிடாமல் உள்ளது.

     இதனால் மாணவர்கள் உயர் கல்விக்கு, பணிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். சட்டக் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஆக.20ந் தேதியோடு முடிவடைகிறது.

250 மடங்கு கட்டண உயர்வு

      பி.எச்டி முழு நேர மாணவர்களுக்கான கட்டணத்தை 100 ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாயாகவும், பகுதிநேர மாண வர்களுக்கான கட்டணத்தை 35 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி உள்ளது. இதுதவிர பதிவு கட்டணம் உள்ளிட்டவைகளையும் உயர்த்தி உள்ளது.

      எனவே, சென்னை பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட வேண்டும், தேர்வு முடிவுகள் வெளிவரும் வரை சட்டக் கல்லூரிகள் போன்ற இதர கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும், பி.எச்டி-க்கான கட்டண உயர்வுகளை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

     இதனை தொடர்ந்து பல்கலைக்கழக பதிவாளர் ஏழுமலையை சந்தித்து மாண வர்கள் மனு அளித்து பேசினர். அப்போது, தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட நடவடிக்கை எடுப்பதாகவும், அதில் காலதாமதம் ஏற்பட்டால், சட்டக் கல்லூரி மாணவர் சேர்க்கை விண்ணப்ப கால அளவை நீட்டிக்க, சட்ட பல்கலைக்கழக துணைவேந்தருக்கு, சென்னை பல்கலை கழக துணைவேந்தர் மூலம் கடிதம் எழுதப்படும் என உறுதி அளித்ததாக சங்கத்தின் மத்தியக் குழு உறுப்பினர் எஸ்.மிருதுளா தெரிவித்தார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் அருண்குமார், தமிழ் (மத்திய சென்னை), எஸ்.ஆனந்தகுமார், ரா.பாரதி (தென்சென்னை)‌, காவியா, நிறத்தில், குணா (வடசென்னை) உள்ளிட்டோர் பேசினர்.