districts

img

வெடிக்காத பட்டாசுகளை சேகரித்த மாணவர்கள் படுகாயம்

திருப்பத்தூர், மே 12- திருப்பத்தூர் அருகே கோவில் திருவிழா வின்போது வெடிக்காத பட்டாசுகளை சேகரித்து வைத்திருந்தபோது வெடித்ததில் மாணவர்கள் 4 பேர் படுகாயமடைந்தனர். திருப்பத்தூரை அடுத்த முத்தம்பட்டி கருணாமூர்த்தி மகன் கார்த்திக் (11), அன்பு  மகன் உமேஸ்வரன் (11),  ராஜ்குமார் மகன் யுவன் (11), குருநாதன் மகன் ஹரிஷ் (8) ஆகிய 4 பேரும்  முத்தம்பட்டி அரசு தொடக்கப்  பள்ளியில் பயின்று வருகின்றனர். முத்தம்பட்டியில் கோவில் திருவிழா நடை பெற்றது. அப்போது மழை யின் காரணமாக சில பட்டாசுகள் வெடிக்காமல் இருந்துள்ளது. இந்த நிலையில், பள்ளிக்குச் சென்றுதேர்வு எழுதி விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த  4 மாணவர்களும் வெடிக் காமல் இருந்த பட்டாசுகளை விளையாட்டுத்தனமாக  ஒரே இடத்தில் சேகரித்து வைத்து வெடிக்கச் செய்துள்ள னர். அப்போது நான்கு பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த தகவலை அறிந்த அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்த னர். இதில் மாணவன்  கார்த்திக் மேல்சிகிச் சைக்காக சென்னை மருத்து வமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மற்ற மூன்று மாணவர்களும் தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருவிழாவில் வெடிக்காமல் இருந்த பட்டாசுகளை சேக ரித்து வெடிக்க வைத்து  மாணவர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் அப்ப குதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.