districts

சிலப்பதிகாரம் குறித்து மாணவர்கள் உரையாடல்

சென்னை, மார்ச் 4 - சிமாட்ஸ்  தமிழ் மன்றத்தில் இந்த வாரம், ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரம் குறித்து உரையாடல் நடைபெற்றது.  மதுரைக்  காண்டம் பகுதிகள் முழுவதும் இடம் பெற்றன. மதுரை காண்டத்தில் கோவலன் கண்ணகி மதுரை மாநகருக்குள் நுழைதல், கண்ணகியை இடையர் குலப் பெண்ணிடம் அடைக்கலமாகக் கொடுத்து விட்டு கோவலன் சிலம்பு விற்க பொற்கொல்லனைச் சந்திக்கச் செல்லு தல், அவன் கள்வன் என்று குற்றம் சாட்டப்ப்பட்டு கொல்லப்படுதல், இதனை அறிந்த கண்ணகி கொதித்தெழுந்து தன் கணவன் கள்வன் அல்ல என்று பாண்டிய மன்னனிடம் நிரூபித்தல் தவறான நீதி வழங்கிய பாண்டிய மன்னன் தன் உயிர் துறத்தல் சினம் தணியாத கண்ணகி மதுரையை எரித்தல் போன்ற செய்திகள் உரையாடலில் இடம்பெற்றது. பொறியியல் கல்லுாரிப் பேராசிரியர் பாஷா சிலப்பதிகாரம் குறித்த தனது அனு பவத்தை வெளிப்படுத்தினார். பேராசிரியை முனைவர் ரேவதி இந்நிகழ்வினை தொகுத்து வழங்கினார்.