சென்னை, பிப். 14 - சென்னை ஐஐடி-யில் தொடரும் மாணவர் தற்கொலைகள் மீது நீதி விசாரணை நடத்தகோரி செவ்வாயன்று (பிப்.14) அந்த கல்வி வளாகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தி னர் ஆவேச ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். மகாராஷ்டிரா மாநிலத் தைச் சேர்ந்த ஸ்டீவன் என்ற மாணவர் பொறியியல் (எலெக்ட்ரிக்கல்) இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அவர் தங்கியி ருந்த சிந்து என்கிற மாண வர் விடுதியில் பிப்.12 அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக ஸ்டீவன் எழுதி வைத்த கடிதம் கிடைத் ததையடுத்து, சாதி ரீதியான துன்புறுத்தலால் மன உளைச்சல் அடைந்ததாரா அல்லது வேறு காரண மாகவா என காவல் துறை யினர் விசாரித்து வருகின்ற னர். இதேபோல் கர்நாடக வைச் சேர்ந்த வீரேஸ் என்ற மாணவர் பி.டெக் சிவில் எஞ்சினியரிங் படித்து வரு கிறார். அதிக அளவிலான தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொ லைக்கு முயற்சித்துள்ளார். விடுதியில் மயக்க நிலை யில் இருந்த அவரை மீட்டு சக மாணவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஒரு மாணவர் தற் கொலை, மற்றொரு மாண வர் தற்கொலை முயற்சி என அடுத்தடுத்த சம்பங்களை தொடர்ந்து, பிப்.13 இரவு முழுதும் ஐஐடி-க்குள் மாண வர்கள் போராட்டம் நடத்தி னர். இந்நிலையில் ‘கல்வி வளாக படுகொலை’களை கண்டித்து செவ்வாயன்று (பிப்.14) ஐஐடி வளாகம் அருகே இந்திய மாண வர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது செய்தியாளர்களி டம் சங்கத்தின் மாநிலத் தலைவர் க.நிருபன் சக்ரவர்த்தி கூறியதாவது: 2014-2022 காலகட்டத்தில் இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் 135க்கும் மேற்பட்ட மரணங்கள் நிகழ்ந்துள்ளன. ஐஐடி நிர்வாகம், ஸ்டீவன் இறந்ததை சக மாண வர்களுக்கு தெரியாமல் மறைத்துள்ளது. தற் கொலைகள் தொடர்பாக காவல்துறை விசாரணைக்கு நிர்வாகம் ஒத்துழைக்க மறுக்கிறது. பாத்திமா லத்தீப், உன்னிகிருஷ்ணன் என ஐஐடியில் உயிர்பலி தொடர்கிறது. ஐஐடி-யில் இடஒதுக்கீடு அமல்படுத்துவதில்லை. இந்த கல்வி வளாகத்தில் சாதிய, மத, பாலியல் ரீதி யான தாக்குதல் தொடர்ந்து நடக்கிறது. சாதிய வன்மத்தை காரணம் காட்டி பல பேராசிரியர்கள் பணியை விட்டுச் சென்றுள்ள னர். திட்டமிட்டு நடை பெறும் கல்வி வளாக படு கொலைகளை நிர்வாகம் மறைத்து வருகிறது. பாத் திமா லத்தீப், உன்னி கிருஷ்ணன் மரணத்திற்கும் ஸ்டீவன் மரணத்திற்கும் தொடர்பு இருக்கிறது. இதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். நீதி விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.ஆனந்த்குமார், ரா.பாரதி (தென்சென்னை), அருண், எஸ்.மிருதுளா (மத்தியசென்னை), காவியா, குணா (வட சென்னை) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.