districts

மினி பஸ் மோதி மாணவர் பலி

திருவொற்றியூர்,ஜூன் 21-  

     சென்னை எர்ணாவூர் லிப்ட் கேட் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பசலுதீன்.  இவரது மகன் அமீதுதீன் (வயது 12). திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். செவ்வாயன்று இரவு அமீதுதீன், எர்ணாவூர் வடக்கு பாரதியார் நகரில் உள்ள கடைக்கு சென்றபோது அந்த வழியாக வந்த தனியார் மினி பேருந்து அவர் மீது மோதியது. இதில் அவன் பலத்த காயம்அடைந்து  உயிரிழந்தார்.