அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும், எப்ஐஆர்-ஐ வெளியிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கல்வி வளாகங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், ஐசிசி கமிட்டி செயல்படுவதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வெள்ளியன்று (டிச.27) சென்னை மாநிலக்கல்லூரி, நந்தனம் கல்லூரிகளில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநிலக்கல்லூரியில் நடைபெற்ற போராட்டத்தில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஜி.அரவிந்தசாமி, மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் தமிழ், நந்தனம் கல்லூரியில் தென்சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.ஆனந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.