சென்னை,ஏப்.30- புதிய தேசியக் கல்விக் கொள்கை என்ற பெயரால் ஒன்றிய அரசு திணிக்க இருக்கும் இந்தியை எதிர்த்து ஏப்.30 அன்று சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலை வர் கி. வீரமணி தலைமை யில் நடந்த போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் துவக்கி வைத்தார். அப்போது தார்ச் சட்டியையும் பிரசையும், கி.வீரமணியிடம் கொடுத்து, வழியனுப்பி வைத்தார். அதனைத் தொடர்ந்து பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை வழியாக ஊர்வலமாகச் சென்று, ரயில் நிலைய பதாகைகளில் உள்ள இந்தி எழுத்துகளை அழிக்கச் சென்றபொழுது, சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகிலுள்ள வீரன் அழகுமுத்துக்கோன் சிலை அருகே, காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.