சென்னை விமான நிலைய விரிவாக்கத்தை எதிர்த்த போராட்டத்தில் முன்னணியில் நின்ற கே.பரமேஸ்வரி, அவரது மகள்கள் பிரியா, பூர்ணிமா ஆகியோரது 14ஆம் ஆண்டு நினைவு நாள் சனிக்கிழமையன்று (ஜன.22) அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி பொழிச்சலூரில் உள்ள அவரது இல்லத்தில் நினைவஞ்சலி நிகழ்வில் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.தாமோதரன், எஸ்.ஜெயசங்கரன் உள்ளிட்டோர் பேசினர்.