சென்னை,அக். 29- உலக பக்கவாத நோய் தடுப்பு தினத்தை யொட்டி, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில், வடபழனி, சிம்ஸ் மருத்துவ மனை சார்பில் நரம்பியல் மற்றும் பக்க வாத சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை (அக்.30) நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி. கே. சேகர் பாபு மற்றும் மேயர் பிரியா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர். இம்மருத்துவ முகாமில் சிம்ஸ் மருத்துவ மனையின் தலைவர் ரவி பச்சமுத்து, துணைத் தலைவர் டாக்டர் ராஜூ சிவசாமி, நரம்பியல் அறுவை சிகிச்சை துறையின் இயக்குநர், மூத்த ஆலோசகர் டாக்டர் கே.ஆர். சுரேஷ் பாபு உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். “உலக பக்கவாத அமைப்பின் புள்ளி விவரப்படி, உலக அளவில் ஆண்டுதோறும் 18 லட்சம் பேர் பக்கவாத நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் மட்டும் ஒரு லட்சத்தில் 145 பேருக்கு இந்த நோய் இருக்கிறது. குறிப்பாக பெருநகரச் சென்னையில், நாள்தோறும் குறைந்தபட்சம் 20 பேராவது இந்நோயினால் புதிதாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே, நோய்க்கான அறிகுறிகள் தென் பட்டால் உடனடியாக மருத்துவரை நாடிச் சென்று பரிசோதனைகள் மேற்கொள்வது அவசியம் என்று என்று சிம்ஸ் மருத்து வமனையின் நரம்பியல் துறையின் இயக்குநர் மற்றும் மூத்த ஆலோசகர் டாக்டர் யு. மீனாட்சி சுந்தரம் கூறினார்.