சென்னை, மார்ச் 2 – சென்னை மாநகரில் உள்ள தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று திமுக உறுப்பினர் வலியுறுத்தி னார். பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் வியாழனன்று (மார்ச் 2) ரிப்பன் மாளிகையில் மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நேரமில்லா நேரத்தில் கணக்கு நிலைக்குழுத் தலைவர் க.தனசேகரன் பேசியதாவது: நீர்நிலை மற்றும் தனியார் இடங்களை தவிர மற்ற அரசு நிலங்க ளில் வசிப்போருக்கு வீட்டுமனை வரி விதிக்க வேண்டும். மாநகராட்சியில் உள்ள 786 பூங்காக்களில் 584 பூங்காக் களின் பராமரிப்பு தனியாரிடம் விடப் பட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு அடுத்த நிதி யாண்டு முதல் மாநகராட்சியே பரா மரிக்க வேண்டும். (இந்த கோரிக் கையை உறுப்பினர்கள் பலரும் பேசும் போது தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்)
நிர்பயா நிதியில் 10 விழுக்காடு கூட செலவிடவில்லை
பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பிற்காக 2019ம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிர்பயா நிதி 137.7 கோடி ரூபாயில் 11.85 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. இந்த நிதியை முழுமையாக பயன்படுத்த வேண்டும். மத்திய கணக்கு குழுமத் தால் நிர்வகிக்கப்படும் பல வங்கி கணக்குகள் பல ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது. அதில் உள்ள பல கோடி ரூபாய் பணத்தை மீட்க வேண்டும். 2018-21 வரையிலான நிதியாண்டுகளில் பயன்படுத்தப்படாமல் உள்ள அறக்கட்டளை நிதிகளை உரிய நோக்கத்திற்கு செலவிட வேண்டும். தெருநாய்களால் பொதுமக்க ளுக்கு மிக பெரிய அச்சுறுத்தல் உள்ளது. தெருநாய்களால் கடிபடுவோர் எண்ணிக்கையை முறையாக பராமரிக் கப்படுவதில்லை. நாய்களுக்கு முறையாக கருத்தடை செய்வது மில்லை. குறிப்பாக, குழந்தைகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ள தெருநாய்களை கட்டுபடுத்த வேண்டும். மாமன்ற உறுப்பினர்கள் இறந்தால் வழங்கப்படும் நிவாரண நிதி 10 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும்.