districts

img

திருவொற்றியூர்-மணலி இணைப்புச் சாலை மேம்பால பணியை துவக்கக்கோரி மறியல்

  சென்னை, நவ. 7- திருவொற்றியூரை மணலியோடு இணைக்கும் மேம்பாலம் பால கட்டு மான பணியை உடனே துவக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திரு வொற்றியூர் பகுதி குழு சார்பில் செவ்வாயன்று இந்திரா நகர் அருகில் சாலை மறியல் நடைபெற்றது. மணலி இணைப்புச் ்சாலை மேம்பாலத்திலிருந்து திருவொற்றியூர், ஆர்.கே.நகர், ராயபுரம் உள்ளிட்ட பகுதி செல்லும் பிரதான சாலையாகும். மூலக்கடை, மாதவரம், புழல் போன்ற பகுதிகளுக்கு  செல்லவும் இந்த பாதை யின் பங்கு முக்கியமானதாகும். திருவொற்றியூர் குப்பை மேடு அருகே இருந்த பக்கிங்காம் கால்வாய் இணைப்பு தரைப்பாலம் கடந்த 2017 ஆம் ஆண்டு இடிக்கப்பட்டு 58 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டு வதற்கு பணிகள் துவங்கி யது. இதில் நான்கு ஆண்டு களாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த நான்கு ஆண்டு களாக இந்தப் பணி முடிக்கப் படாததால் 1.5 கிலோமீட்டர் தூரத்தில் மணலியை அடைய வேண்டிய அனைத்து வாகனங்களும் பக்கிங்காம் கால்வாய் கரை  ஓர சாலை வழியாக சத்திய மூர்த்தி நகர், எம் எப் எல்,  சிபிசிஎல் என 6 கிலோமீட்ட ருக்கு மேல் சுற்றி மண லியைச் சென்றடைய வேண் டியுள்ளது. இதனால் பஸ்,  ஆட்டோ, இருசக்கர வாகன ங்களில் பயணம் செய்யும் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேம்பால பணியால் மழை நீர் செல்வதில் தடை ஏற்பட்டு அதைச் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. எனவே 75 விழுக்காடு  பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலை யில் நெடுஞ்சாலை துறை மேம்பால பணியை உடன டியாக முடிக்க வேண்டும் என வலியுறுத்தி  இந்த மறி யல் போராட்டம் நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பகுதி செயலாளர்  கதிர்வேல் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் வடசென்னை மாவட்டச் செயலாளர்  எல் சுந்தர்ரா ஜன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். ஜெயரா மன், மாவட்டக் குழு உறுப்பி னர் எஸ்.பாக்கியம், மணலி  பகுதிச் செயலாளர் பாபு  உள்ளிட்டோரும்  பொது மக்களும் கலந்துகொண்ட னர்.