சென்னை, ஜூலை 8- மாணவர் சேர்க்கை நடை முறை அரசின் விதிகளின் படி நடைபெறுவதைத் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை உறுதிப் படுத்தப் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மேடையின் சார்பில் பிரின்ஸ் கஜேந்திரபாபு விடுத்துள்ள அறிக்கை வருமாறு: மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு பின்பற்றுவது, முறை யான கட்டணங்களை மட்டுமே வசூ லித்து, அதற்குரிய முறையான ரசீது மாணவர்களுக்கு வழங்கு வது, இத்தகைய முக்கிய அம்சங் களை கண்காணிக்க ஆண்டு தோறும் ஒவ்வொரு அரசு, அரசு உதவி பெறும் கல்லூரியிலும் "மாணவர் சேர்க்கைக் குழு" அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அத்தகைய குழுவை மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி நிர்வாகம் அமைக்கவில்லை யென்றால், முறைப்படியான மாண வர் சேர்க்கை நடத்துவதற்கு கல்லூரி நிர்வாகம் விரும்பவில்லை என்றுதானே பொருள்?
குழு அமைக்கவில்லை என்று தெரிந்தும் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர், கல்லூரிக் கல்வி இயக்குநர் ஆகி யோர் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லையென்றால் விதிமீறல்க ளுக்கு துணை போகிறார்களா? என்ற கேள்வி எழுகிறது. இரண்டு நாட்களாக பேராசிரி யர்கள் அரசின் விதியைப் பின்பற்றி "மாணவர் சேர்க்கைக் குழு" அமைத்தல் உள்ளிட்ட நியாய மான கோரிக்கைகளுக்காக உள்ளி ருப்பு போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர். நியாய மான கோரிக்கைகளை நிறைவேற்று வதற்குப் பதிலாக அவர்களை இரவு முழுக்க இருட்டில் அமர வைத்து, தற்போது அவர்கள் பயன்படுத்த முடியாத அளவில் கழிப்பறைகளை அடைத்துள்ளனர்.
இரண்டு நாட்கள் நடக்கும் போராட்டங்களுக்குப் பிறகும் அர சின் விதிகளை கல்லூரி நிர்வா கம் பின்பற்றி நடக்க கல்லூரிக் கல்வி இயக்ககம் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. அரசு ஆணைகளை அமல்படுத்த வலி யுறுத்தி நடக்கும் போராட்டத்தை அடக்குமுறை கொண்டு ஒடுக்கிவிட முடியாது. அடக்குமுறையை மேற்கொள்ள கல்லூரி நிர்வாகம் துணிந்தால், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் பங்கேற்புடன் போராட்டம் மேலும் வீரியம் அடையும். மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி நிர்வாகம் அரசின் விதிகளின் படி "மாணவர் சேர்க்கைக் குழு" அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடி யாக நிறைவேற்ற உரிய நட வடிக்கைகளை தமிழ்நாடு அரசு உயர்கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைமுறையில் அரசின் விதிகள் பின்பற்றப்படுவதையும், அறிவிக்கப்பட்ட கட்டணம் மட்டுமே வசூலிப்பதை உறுதிப்படுத்த உரிய கண்காணிப்புக் குழுக்களை மாவட்டம் தோறும் உருவாக்க வேண்டும். புகார் தெரிவிக்க உரிய வழி முறைகளைப் பொது மக்களுக்கு அறிவிக்க வேண்டும். பெறப்படும் புகார்களைப் பதிவுச் செய்து, தொடர் நடவடிக்கைகளை புகார் அளித்தவருக்கு தெரியப்படுத்த உரிய வழிமுறைகளை அறிவிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறையைப் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது. இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.