சென்னை, ஜன.5- ஸ்ரீராம் இலக்கியக் கழகம், தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக நடத்திய திருக்குறள் பேச்சுப் போட்டியில் மாணவ- மாணவிகள் உற்சாகமாக கலந்துகொண்டனர். இதில் சென்னை அம்பத்தூரில் இயங்கி வரும் சேது பாஸ்கரா நிறைநிலை மேல்நிலைப் பள்ளி மாணவி ப. யாழினி இடைநிலைப் பிரிவில் இரண்டாம் பரிசையும், சென்னை, முகப்பேரில் இயங்கி வரும் வேலம்மாள் வித்யாலயா மாணவி பத்மப்ரியா மேல்நிலைப் பிரிவில் மூன்றாம் பரிசை யும் வென்று சாதனை படைத்துள்ளனர். ஸ்ரீராம் இலக்கியக் கழகம், ‘இடைநிலைப் பிரிவு (6-8 ஆம் வகுப்பு)’, ‘மேல்நிலைப் பிரிவு (9-12 வகுப்பு)’, ‘கல்லூரிப் பிரிவு’ என மூன்று பிரிவுகளில் திருக்குறள் பேச்சுப் போட்டியை மாநில அளவில் நடத்தியது. இதில் மொத்தம் 1597 மாணவர்கள் கலந்து கொண்டனர். 12 மண்டலங்களில் கால் இறுதி மற்றும் அரை இறுதிச் சுற்றுகள் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற்றன. இவற்றிற்கான இறுதிச் சுற்று அண்மையில் சென்னையில் நடைபெற்றது.