செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 2024 – 2025 ஆம் கல்வியாண்டில் பயிலும் 150 இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவித்து மருத்துவ துறையில் அர்பணிக்கும் நிகழ்வு நடைபெற்றது. பொது இயக்குநர் ஜெயசங்கரன், மருத்துவக் கல்லூரியின் துணை வேந்தர் மணிவண்ணன், அதியமான் பொறியியல் கல்லூரி முதல்வர் ஜி.ரங்கநாத் ஆகியோர் கலந்து கொண்டனர். அதியமான் கல்லூரி கல்விக் குழுமத்தின் தலைவர் மு.தம்பிதுரை சிறப்புரையாற்றி கல்வி, விளையாட்டு துறைகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். கல்லூரி அறக்கட்டளை தலைவர் மருத்துவர் பானுமதி தம்பிதுரை, அறக்கட்டளை இயக்குனர்கள் மருத்துவர் இலாசியா தம்பிதுரை, மருத்துவர் நம்ரதா தம்பிதுரை, மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜா முத்தையா, துணை முதல்வர் ஆனந்த ரெட்டி உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.