districts

img

புதுச்சேரியில் நல வாரிய செயல்பாடுகளை துரிதப்படுத்துக

புதுச்சேரி, அக். 17- அமைப்புசாரா தொழி லாளர்களுக்கான நல வாரியத்தின் செயல்பாடு களை துரிதப்படுத்த கோரி சிஐடியு சார்பில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்டுமானம் உள்ளிட்ட அமைப்புசாரா தொழி லாளர்களுக்கு பண்டிகை கால உதவி தொகை ரூ.5ஆயிரம்  வழங்க வேண்டும். அமைப்புசாரா நல வாரியத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி நல வாரிய செயல்பாடுகளை துரிதப் படுத்த வேண்டும்.   அனைத்து தொழிற்சாலை தொழிலாளர்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவன தொழிலாளர்களுக்கும் குறைந்த பட்ச சம்பளமாக ரூ. 26ஆயிரம் வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும்.தொழிலாளர் துறை யில் காலியாக உள்ள  பணி யிடங்களை உடனே  நிரப்பிட வேண்டும்.    அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனை வருக்கும் ரூ.10 லட்சம்  அளவிலான மருத்துவ-ஆயுள் காப்பீடு திட்டம்  உரு வாக்க வேண்டும், புதுச்சேரி போக்குவரத்து துறையில்  காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்தபோராட்டம்  நடைபெற்றது.  புதுச்சேரி பழைய பேருந்து நிலை யத்திலிருந்து புறப்பட்ட  ஊர்வலத்திற்கு சிஐடியு மாநிலத்  செயலாளர் சீனி வாசன் தலைமை தாங்கி னார்.  சிஐடியு தமிழ் மாநில  பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் ஊர்வலத்தை   துவக்கி வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர்  ஆர். ராஜாங்கம் பேசினார். சிஐடியு மாநில தலைவர் பிரபுராஜ் நிர்வாகிகள் முருகன்,கொளஞ்சியப்பன், ரவிச்சந்திரன், ராமசாமி, ராஜ்குமார், மதிவாணன், மது,தினேஷ்குமார், பச்சமுத்து, மணிபாலன், வடிவேல், விஜயகுமார், மணவாளன், ஞான பிரகாசம், சூரியன், பூரணி, காளிதாஸ், வீர மணிகண்டன்,முருகன், தாமோதரன், சத்தியமூர்த்தி, சங்கரன்,ரமேஷ், சேவி யர் உட்பட திரளான தொழிலாளர்கள்  பங்கேற்ற னர். முன்னதாக அண்ணா சிலையிலிருந்து துவங்கிய ஊர்வலம்  நேரு வீதி, மிஷன் வீதி வழி யாக சென்றபோது  சட்டப் பேரவை அருகில் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.